தவேப வேளாண் இணைய தளம் ::முக்கிய பகுதிகள் :: பண்ணை சார் தொழில்கள்

காளான் படுக்கை தயாரிக்கும் முறை

பொதுவாக சிப்பிக் காளான் வளர்ச்சி வெளியே தெரியக் கூடிய பாலித்தீன் பைகளில், வளர்க்கப்படுகிறது. இந்த பையின் அளவு 60 x 30 செ.மீ, 80 காஜ் தடிமனுடன் இருக்க வேண்டும்.

செய்முறை:

  • கிருமி நாசினி கொண்டு கைகளை நன்றாகக் கழுவ வேண்டும்
  • பாலித்தீன் பைகளை எடுத்து அடி நுனியை நூல் கொண்டு மேல் நோக்கி இருக்குமாறு கட்டி விட வேண்டும்
  • கிருமிநீக்கம் செய்யப்பட்ட வைக்கோலை ஈரம்போக நிழலில் உலர்த்த வேண்டும்
  • நன்கு வளர்ந்த விதைப் படுக்கையை வெளியே எடுத்து, அமிழ்த்தி 2 அரைப் பகுதிகளாக பிரிக்க வேண்டும் (ஒரு வித்துப் பையிலிருந்து 2 படுக்கைகள் தயார் செய்யலாம்)
  • பாலித்தீன் பையின் அடியில் 3” அளவு உயரத்திற்கு வைக்கோலை நிரப்பி, ஒரு கையளவு காளான் வித்தை எடுத்து, வைக்கோல் படுக்கையின் மீது தூவ வேண்டும்
  • இரண்டாவது அடுக்கு வைக்கோலை 5” உயரத்திற்கு நிரப்பி, காளான் வித்தையும் மேற்சொன்னபடி நிரப்பவும்
  • 5 அடுக்கு வைக்கோல் மற்றும் காளான் வித்துக்கள் வரும்  வரை இந்த முறையை திரும்ப திரும்ப செய்ய வேண்டும்
  • படுக்கையை மெதுவாக அமிழ்த்தி, பின் நூலால் இறுக்கமாகக் கட்ட வேண்டும்
  • காற்றோட்டத்திற்காக 6 துளைகள் இட வேண்டும்
  • கூரை வேயப்பட்ட அறையில் இந்த படுக்கைகளை அலமாரி அமைப்புகளில் (அ) தொங்கும் நிலையிலோ அடுக்கவும்
  • அறை வெப்ப நிலை 22 – 250 செ மற்றும் ஒப்பு ஈரப்பதம் 85 – 90%
  • ஏதும் மாசுபட்டுள்ளதா என்று கண்காணிக்க வேண்டும். அப்படி இருந்தால் அகற்றி விட வேண்டும்
  • அதேபோல், பூச்சிகள் ஈக்கள், வண்டுகள், கரையான்கள், ஏதும் தாக்கியிருந்தர், மாலத்தியான் 1 மி.லி / லிட்டர் நீரில் கரைத்து தெளிக்க வேண்டும்
  • நன்றாக பரவிய விதைப் படுக்கையை வளரும் அறைக்கு மாற்ற வேண்டும்

 

வைக்கோலை 5 செ.மீ அளவுக்கு வெட்டுதல் வைக்கோலை 4 – 5 மணி நேரத்திற்கு ஊற வைத்தல் படுக்கைகளை உட்செலுத்துவதற்கான படுக்கை வித்து பாலித்தீன் பை: 60 x 30 செ.மீ, 80 காஜ் தடிமன்
பையின் ஒரு முனையை நூலைக் கொண்டு கட்டுதல் வைக்கோலை 3” உயரத்திற்கு பாலித்தீன் பையின் அடியில் நிரப்புதல் காளான் வித்துக்களைத் தூவுதல் இரண்டாவது அடுக்கு வைக்கோலை 5” உயரத்திற்கு நிரப்பி, காளான் வித்தையும் நிரப்பவும்
ஐந்து அடுக்கு வரும் வரை திரும்ப திரும்ப செய்தல் மெதுவாக அழுத்தி, நூலைக் கொண்டு பையை ஈட்டுதல் 6 காற்றோட்டத் துளைகள் ஏற்படுத்துதல் விபரங்கள் இடுதல்
தொங்கும் கயிறு முறை

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:

  • வித்து பரவும் அறையை இருட்டாக வைத்திருக்க வேண்டும். இதனால் வித்துக்கள் வேகமாக வளரும்
  • எலி கொல்லியை குறிப்பிட்ட கால இடைவெளியில் வைக்க வேண்டும்
  • நீரை மணல் அடுக்கின் மீது குறிப்பிட்ட கால இடைவெளியில் தெளிக்க வேண்டும்
  • காளான் படுக்கைகளின் மீது பூச்சிக் கொல்லிகளை தெளிக்கக் கூடாது

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2016